--- --:--:-- --

திருநங்கையின் வளர்ப்பு மகனை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்த நபர்..!

4

சேலத்தில் வீட்டை எழுதி கேட்டு திருநங்கையின் 13 வயது வளர்ப்பு மகனை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தர் நபர் கைது செய்யப்பட்டார். கார்கானா தெருவை சேர்ந்த திருநங்கை கண்ணகிக்கு 13 வயதில் தத்து மகன் உள்ளார்.

 

கண்ணகியும் அன்னதானபட்டியை சேர்ந்த அப்சல் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். கண்ணகி பெயரில் இருக்கும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை எழுதி கேட்டு அவரது வளர்ப்பு மகனை அப்சல் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

 

அது தொடர்பான வீடியோ காட்சிகளை கொண்டு அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon