சொந்த நாட்டு மக்களையே கொன்ற நைஜீரியா ராணுவம்..!
நைஜீரியாவின் சிமிலி பகுதியில் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் வான் வழித்தாக்குதல் நடத்தி, சரமாரியாக குண்டுகளை அந்நாட்டு ராணுவம் வீசியது.
ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் கிளர்ச்சியாளர்கள் யாருமே இல்லை. ராணுவத்தின் இந்த தவறுதலான தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.





