விஷம் வைத்து 9 பேரை அழித்த மந்திரவாதி..!
மஹாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக மந்திரவாதி உட்பட இரண்டு பேரால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான மாலிக் என்பவர் அவரது சகோதரர் கோபால் ஆகிய ஒன்பது பேர் வீட்டில் இருந்து இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கடன் தொல்லை கொடுத்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 13 பேரை கைது செய்து உள்ளனர்.
இந் நிலையில் தீவிர விசாரணையில் மந்திரவாதி மற்றும் அவரது டிரைவரால் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.






