துடி துடித்து உயிரிழந்த சிறுமி..!
வள்ளியூரில் மொபட் மீது அரசு பஸ் மோதியதில் சிறுமி பலியானார். நெல்லை மாவட்டம் ஏர்வாடி ஆலங்குளத்தை சேர்ந்த சகுந்தலா தனது மகள் வர்ஷிகாவுடன் வள்ளியூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிறுமி வர்ஷிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






