மறு திருமணம் செய்த இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கணவர்..!
தென்காசி மாவட்டத்தில் மறு திருமணம் செய்த இளம்பெண்ணை முதல் கணவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அருணாசலபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கீதா என்பவர் கண்ணன் என்ற நபரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்தார். இரண்டு வாரங்கள் மட்டுமே குடும்பம் நடத்திய நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார்.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சங்கீதா பொன்ராஜ் என்பவரை திருமணம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த முதல் கனவன் சங்கீதாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.







