சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்புத் தந்தை..!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கணவரை பிரிந்து 13 வயது மகளுடன் வசித்து வந்த பெண்ணை சபி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் இரண்டாவது மனைவியின் மகளை பாலியல் கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.





