அரசு பள்ளிக்கு 5 செண்டு நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி..!
ஆரணி அடுத்த அரியப்பாடி கிராமத்தில் அரசு பள்ளியை தரம் உயர்த்த விவசாயி ஒருவர் 15 லட்ச ரூபாய் நிலத்தை தானமாக வழங்கினார். நடுநிலைப் பள்ளியை உயர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துமாறு கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த பொழுது கூடுதல் வகுப்பறைகளை கட்ட இடமில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கோபி என்ற விவசாயி தனக்கு சொந்தமான ஐந்து செண்ட் நிலத்தை அரசாங்கத்திற்கு பத்திரப்பதிவு செய்து கோட்டாட்சியிடம் பத்திரத்தை ஒப்படைத்தார். அவருக்கு அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.






