பழுதான ரயிலை கைகளால் தள்ளி சென்ற நிகழ்வு..!
மத்திய பிரதேசத்தில் பழுதான ரயிலை கைகளால் தள்ளி சென்ற நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிதா ரயில் நிலையத்தில் பழுதான ரயிலை ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரயில்வே ஊழியர்களும் பொதுமக்களும் இணைந்துகைகளால் தள்ளி சென்றனர்.
அவர்களில் சிலர் காலணி கூட அடையாமல் கூர்மையான ஜல்லி கற்களில் நின்று மிகவும் சிரமப்பட்டு ரயிலைத் தள்ளிச் சென்றுள்ளனர்.







