--- --:--:-- --

செல்போனில் படம் பிடிக்கும் இளைஞர்களை ஆக்ரோஷமாக துரத்திய யானை..!

1

கோவை சின்ன தடாகத்தின் அருகே செல்போனில் படம் பிடிக்கும் இளைஞர்களை ஆக்ரோஷமாக துரத்தியது. இங்குள்ள வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவுக்காக அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுவது வாடிக்கையாகிவிட்டது.

 

இந்த நிலையில் நேற்று இரவு அணைப்பட்டி சாலையை கடந்து வந்த மலைப் பகுதியை நோக்கி சென்ற யானை கூட்டம் ஒன்று அதன் அருகில் சென்று படம் பிடிக்க முயன்று இளைஞர்களை ஆக்ரோஷமாக துரத்தியது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Right Menu Icon