சாலையில் கிடந்த 26 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த ஓட்டுநர்..!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சாலையில் பர்ஸில் இருந்த இருபத்தி ஆறு ஆயிரம் ரூபாய் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் பஞ்சாயத்து தலைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
சௌந்திரபாண்டியபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் பர்வீன் குமார் ஆட்டோ ஓட்டுநர் சிவகுரு ஆகியோர் சென்றபொழுது சாலையில் பர்ஸ் இருந்ததை கண்டனர்.
பின்னர் அதிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை வள்ளியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், அதை பெற்றுக் கொண்ட போலீசார் பர்வீன்குமார், சிவகுரு ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.






