பெண்ணை காலால் எட்டி உதைத்த கவுன்சிலர்.. அலறி துடித்த பரிதாபம்..!
கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் சொத்து தகராறு தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.
இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த கவுன்சிலரான நபர் சரோஜாவை எட்டி உதைத்துள்ளார். இதனால் காயமடைந்த சரோஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






