திருப்பதிக்கு சென்று விட்டு திரும்பிய பக்தர்களின் கார் எரிந்து நாசம்..!
திருப்பதி மலை அடிவாரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது. ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர்கள் திருப்பதியில் சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பினர்.
காரில் இருந்து புகை வருவதை கண்டு அனைவரும் கீழே இறங்கிய நிலையில் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.





