பேருந்து நிற்காமல் சென்றதால் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவிகள்..!
திருவாரூரில் பேருந்துகள் நிற்காமல் சென்றதால் பதற்றமடைந்த பத்தாம் வகுப்பு மாணவிகளை இருசக்கர வாகன ஓட்டிகள் தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று உதவியுள்ளார்.
முகுந்தனூர் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வுக்கு தயாராக இருந்த நிலையில் கொரடாச்சேரியில் உள்ள பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
அந்த வழியாக சென்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் இருக்காமல் சென்றதால் தேர்வு எழுத செல்ல முடியாது என மாணவிகள் பதற்றமடைந்தனர். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மாணவிகளிடம் தகவல் கேட்டு அவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று உதவினார்.





