இண்டிகோ விமானத்தின் மீது மோதிய பறவை..!
மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் மும்பையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 5 மணி அளவில் இண்டிகோ விமானம் பயணிகளுடன் டெல்லி நோக்கி புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதால் அந்த விமானம் அவசரமாக மும்பை விமான நிலையத்திற்கே திருப்பப்பட்டு மீண்டும் தரை இறக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.







