தண்ணீரில் தத்தளித்தவரை காப்பாற்ற சென்ற சிறுவனுக்கு நடந்த விபரீதம்..!
அந்தியூர் அருகே உள்ள மடக்குறிச்சி கருமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு தீர்த்தம் எடுக்க சென்ற குழு உடன் சென்ற 13 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
முதலில் சீனிவாசன் என்பவர் ஆழமான பகுதிக்கு சென்று ஆற்று நீரில் மூழ்கி தத்தளித்ததாகவும் அவரை மீட்க சென்ற ஹரிஷ் ராஜ் என்று சிறுவனும் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.





