பன்றிகளிடம் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி..!
OLYMPUS DIGITAL CAMERA
அஸ்ட்ரா ஜெனக்கா நிறுவனத்தின் சோதனை தடுப்பூசியை இரண்டு தடவைகள் ஆக பன்றிகளிடம் பரிசோதித்த போது அவற்றிடம் எதிரான நோய் எதிர்ப்பு சக்தி பெரிய அளவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக விங்ஞானிகள் அஸ்ட்ரா ஜெனக்கா நிறுவனத்திற்காக கொரொனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அந்த தடுப்பூசியை பிரிட்டனின் பிரிபைட் ஆராய்ச்சி அமைப்பு பன்றிகளிடம் சோதித்து பார்த்தது.
முதலில் ஒரு டோசும், பின்னர் போஸ்டர் டோசும் அளிக்கப்பட்டபோது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் ஆய்வுகள் தொடரப்பட்ட நோயாளிகளுக்கு இரண்டு டோசுகள் கொடுத்தால் கொரொனா நோய் பாதுகாப்பு கிடைக்கும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.





