ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்..!
இன்றைய சூழ்நிலையில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைத்த அவர் பள்ளிக்கு வரும் மாணவர்கள் விழுக்காடு 98.5 சதவீதமாக இருப்பதாக கூறினார்.
மடிக்கணினி வழங்கும் திட்டம் இல்லை என்ற அமைச்சர் செங்கோட்டையன் அதற்கு பதிலாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு உதவியுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.






