சிறையில் இருந்து தப்பிய அரசு மருத்துவர்
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. நெல்லூர் மாவட்டம் உதயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத் தாகூர்.
இவன் அங்குள்ள செவிலியர்கள் இருவருக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறி செவிலியர்களின் உறவினர்கள் அவனை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனர்.
அங்கு போலீசாரின் கவனத்தை திசை திருப்பி அவன் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மருத்துவர் ரவிந்திரநாத்தை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




