போதை பொருள் வழக்கில் சோனியா அகர்வால் கைது..!
கன்னட நடிகை சோனியா அகர்வாலை கர்நாடக போதை பொருள் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பலரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் நடத்தும் விருந்து நிகழ்ச்சிக்கு சப்ளை செய்வதற்காக பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கன்னட நடிகையும், மாடல் அழகியான சோனியா அகர்வால் தொழிலதிபர் பரத் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்திய போலீசார் போதைப்பொருட்களை கைப்பற்றினர்.
இதில் நடிகை சோனியா அகர்வால், தொழிலதிபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.







