நோயாளியின் கட்டில் அடியில் பாம்பு..!
தெலுங்கானாவில் மருத்துவமனை ஒன்றில் நோயாளியின் கட்டில் அடியில் பாம்பு இருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலத்தில் மகாத்மா காந்தி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளிகள், மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் பாம்பை பிடித்து வெளியே விட்டனர். இந்த சம்பவத்தால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்பொழுது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





