ஒவ்வொரு வாரமும் ஸ்மார்ட் வகுப்பு ஒத்திகை: அரசு
பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் ஸ்மார்ட் வகுப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 15-ம் தேதி மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் உரையாடவுள்ளனர்.
இதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக, அரசு பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறையை தயாராக வைத்திருக்க பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியது.






