குடிபோதையில் வழக்கறிஞரின் காரை வழிமறித்து தாக்கிய நபர் அதிர்ச்சி..!
மயிலாடுதுறையில் குடிபோதையில் காரை வழிமறித்து வழக்கறிஞரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை அருகே இருப்பவர் சங்கமித்ரன். வழக்கறிஞரான இவர் செம்பனார்கோயில் காவல் நிலையத்தை கடந்து காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மதுபோதையில் பைக்கை ஓட்டி வந்தவர் வழக்கறிஞரை வெளியே இழுத்து சட்டையை பிடித்து மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ரகு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே அதிமுக மாவட்ட செயலாளர் தன்னை கூலிப்படை வைத்து மிரட்டி வருவதாக சங்கமித்ரன் குற்றம் சாட்டியுள்ளார்.






