பிரபல உணவகத்தில் அதிர்ச்சி.. வாடிக்கையாளர் கடும் வாக்குவாதம்..!
மதுரை அருகே வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் புழு இருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பிரபல தனியார் சைவ உணவகம் அமைந்துள்ளது. சேலத்தை சேர்ந்த சசி தேவன் என்பவர் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
அப்பொழுது சாம்பாரில் புழு இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உணவக ஊழியரிடம் கேட்டபொழுது அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது. பின்னர் உணவக ஊழியர்கள் தட்டில் இருந்த புழுவை அப்புறப்படுத்தினார்.
பின்னர் உணவக ஊழியரிடம் உணவு உட்கொண்ட சசி தேவன் வாக்குவாரி திரையிடப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.





