விசாரணையின் போது கதறி அழுத ஷாருக்கான் மகன்..!
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்துள்ளார். மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் போதை பொருட்களுடன் நடந்த விருந்தின்போது நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஆர்யன்கான் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனுடைய போதை பொருள் தடுப்பு பிரிவு நடத்திய விசாரணையில் கண்ணீர் விட்டு கதறி அழுததாகவும் கேள்வி எழுப்பிய போதெல்லாம் அவர் பதற்றமான நிலையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






