சீரியல் நடிகை ராஷ்மி ஜெயராஜிற்கு குழந்தை பிறந்தது..!
விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் மக்களிடம் பெயர் பெற்ற நடிகைகள் பலர் உள்ளார்கள், நிறைய புகழையும் சம்பாதித்துள்ளனர். அப்படி விஜய்யில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடர் மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர் ராஷ்மி.
இவர் நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகம் பாதியில் நிறுத்தப்பட பின் திருமணம் வேலைகளில் பிஸியானார். இவருக்கும் ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் அதன்பின் ராஜபார்வை என்ற தொடரில் முக்கிய நாயகியாக நடித்து வந்தார். அந்த சீரியல் முடிவுக்கு வர பின் கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தார்.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அவர் எடுத்த போட்டோ ஷுட், சீமந்தம் போன்ற புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது. தற்போது நடிகைக்கு நேற்று குழந்தை பிறந்துள்ளது, என்ன குழந்தை தெரியுமா, பெண் குழந்தையாம்.அவரே கியூட்டான ஒரு குழந்தையின் புகைப்படம் பதிவிட்டு பெண் குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.






