ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ ஆதரவு!
ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் தமிழ்நாட்டிற்கான நிதிப் புறக்கணிப்பைக் கண்டித்து, மார்ச் 15 ஆம் தேதி தி.மு.க கூட்டணி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ ஆதரவு தெரிவித்துள்ளது.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நடைபெறும் இப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அழைப்பு விடுத்துள்ளார்.





