குடும்பத்தில் உள்ள குழந்தைகளை சந்திப்பேன் எனக்கூறிய சசிகலா..!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா பல நாட்களுக்கு பிறகு எப்பொழுது சுற்றுப்பயணம் செல்கிறீர்கள் தொண்டர்கள் உங்களை சந்திப்பார்களா என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது தாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம் எனவும் குடும்பத்திலுள்ள பிள்ளைகளை சந்திப்போம் எனவும் தெரிவித்தார். விமான நிலையத்தில் காரை விட்டு இறங்கிய சசிகலாவை அதிமுக கொடியுடன் வலம் வந்தவர்கள் கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா வாழ்க என்று முழக்கமிட்டனர்.





