சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது..!
சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட பின்னரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரது சகோதரர் திவாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளதாகவும் அவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. இதனை சிறை அதிகாரிகள் பொருட்படுத்த வில்லை எனவும் திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நள்ளிரவில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.







