நீர் சேமிப்புக்கு பதில் மணல் கொள்ளை: அன்புமணி
காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை ஓரளவாவது தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென அன்புமணி தெரிவித்துள்ளார். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் எங்கெல்லாம் தடுப்பணைகளை கட்ட வேண்டுமோ அங்கு மணல் குவாரிகளை அமைத்து திமுக மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக விமர்சித்துள்ளார்.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடல் நீர் உட்புகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் இதுவே திராவிட மாடல் அரசின் பரிசு எனவும் தெரிவித்துள்ளார்.






