அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷ்யா..!
பொக்ரானில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ரஷ்ய ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ அமைப்பில் சேர கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய நாட்டின் மீது 27வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏவுகணை தாக்குதலில் பல்வேறு நகரங்கள் அழிந்தன . ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரஷ்ய ராணுவத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர்.
இதனால் அச்சம் அடைந்த மக்கள் அலறியடித்து ஓடினர். தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





