மீனவ குடும்பங்களுக்கு ரூ.8,000 நிவாரணம்..!
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதே மீன்பிடி தடைக்காலமாகும். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் இருக்கும்.
இத்தடை காரணமாக, தமிழகம் முழுவதும் 20,000 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த காலத்தில், மீனவ குடும்பங்களுக்கு நிவாரணமாக மாதம் ரூ.8,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





