தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம்..!
டெல்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் லாரியில் வந்த தண்ணீரை பிடிக்க மக்கள் ஆபத்தான முறையில் முண்டியடித்துக் கொண்டு ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.
கடுமையான வெப்பம் வரும் சூழலில் ஹரியானா டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரை விடுவிக்காததால் கட்டுப்பாடு நிலவுகிறது. டெல்லியில் மக்கள் தண்ணீருக்காக அல்லல்படும் சூழலை உருவாக்கி உள்ள நிலையில் தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சமீபத்தில் அந்த மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் லாரிகள் வந்த தண்ணீரை பிடிக்க மக்கள் முண்டியடித்த காட்சி தண்ணீர் இன்றி மக்கள் படும் பாட்டை காட்சிப்படுத்தியது.





