மக்களிடம் உதவி கேட்கும் ரத்தன் டாட்டா..!
தெரு நாய்க்காக உதவி கேட்டு ரத்தன் டாடா இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய தொழிலதிபரும் tata முன்னாள் தலைவருமான ரத்தன் டாட்டா மும்பை மக்களிடம் உதவி கேட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத 7 மாத தெரு நாய்க்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை மக்களிடம் உதவியை கேட்டுள்ளார். நாயின் புகைப்படத்தை பதிவிட்டு அதற்கான தேவைகளை பட்டியலிட்டுள்ளார்.
ரத்தம் வழங்கும் நாயானது ஆரோக்கியமானதாகவும் 25 கிலோ எடை கொண்டிருக்க வேண்டும் எனவும் நாயின் உரிமையாளர்களுக்கு கவனத்தில் கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவிற்கு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளனர்.





