புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை..!
அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்தே புயல் செவ்வாயன்று குஜராத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
இந்த புயல் செவ்வாய் பிற்பகலில் குஜராத்தின் போர்பந்தர் நாளை இடையே கரையை கடக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறை உயரதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேவையான கருவிகளுடன் குஜராத்திற்கு புறப்பட்டுள்ளனர்.




