மருத்துவ உதவியை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் என பிரதமருக்கு பழனிசாமி கடிதம்..!
தமிழகத்திற்கான ஆக்சிசன் ஒதுக்கீடு, ரெம்டெசிவர் மருந்துகள் தடுப்பூசிகள் ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தவும், கொரொனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதாகவும் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மருத்துவ உதவியை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.





