இந்தியாவின் ஆளில்லா ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்..!
இந்தியாவின் ஆளில்லா ட்ரோன் ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை சுட்டு வீழ்த்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
அந்த ட்ரோன் எல்லைக்கோட்டை தாண்டியதாகவும், ஆகையால் சுடப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால், இதுகுறித்து இந்தியா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழலில் இந்த சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.





