பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகளை திறக்க உத்தரவு..!
பஞ்சாப் மாநிலத்தில் நாளை மறுநாளில் இருந்து அனைத்து பள்ளிகளையும் திறக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கொரொனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரொனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்படுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்து வருவதால் பஞ்சாப் மாநில அரசு அனைத்து பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.







