விஜய் கருத்தில் உள்நோக்கம் இல்லை: திருமாவளவன்
விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் விஜய் இந்த கருத்தை தெரிவித்திருப்பார் என்ற அவர், இதில் அரசியல் பார்வையை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். முன்னதாக, தமிழ்நாட்டில் நல்ல அரசியல் தலைவர்கள் குறைவாக இருப்பதாக கூறியிருந்தார்.





