நித்தியானந்தா எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை..!
நித்தியானந்தா ஒரு பொருட்டில்லை எனவும் எங்களை மீறி இங்கு வந்தால் கைது செய்யப்படுவார்கள் எனவும் புதிய ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனம் ஞானசம்பந்தன் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து புதிய ஆதீனமாக ஹரிஹர சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நான் தொடர்பில் தான் இருக்கிறேன் எனவும் நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை அவர் எங்களை மீறி இங்கு வந்தால் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.







