அதிநவீன வசதிகளுடன் புதிய மருத்துவமனை தயாராக உள்ளது !
சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 500 படுக்கைகள் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை தயாராக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் 25% பயன் பெற ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.







