இசை கலைஞரான ரிகானா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு..!
சர்வதேச பாப் இசை கலைஞரான ரிகானா டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கோள்காட்டி நாம் ஏன் அது குறித்து பேசுவதில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது ட்வீட்டை இலட்சக்கணக்கானோர் பகிர்ந்து ஆதரவாக பதிவிட்டனர். அவரது பதிவிற்கு இந்தியாவிலும் வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.







