பருவமழை: மக்களுக்கான மின்சார வாரிய வழிமுறைகள்
மழைக்காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
நனைந்த கைகளால் மின்சாதனங்களை இயக்கக் கூடாது, மின் கம்பங்கள் அருகே தேங்கிக் கிடக்கும் நீரில் செல்லக் கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மின்தடை புகார்களை 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.





