நீர் நிலைகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம்..!
திருப்பூர், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர், மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.





