திங்கட்கிழமை மட்டும் இறைச்சிக் கடைகள் மூடப்படும்!
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் மகாவீர் ஜெயந்தி ஆன திங்கள்கிழமை மட்டும் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் சென்னையில் வழக்கம் போல இறைச்சி கடைகள் இயங்கும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அப்போது தனிநபர்களின் இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






