11 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை..!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்ல காட்டு எஸ்டேட் பகுதியில் தீபக் என்ற சிறுவனை சிறுத்தை ஒன்று கடித்துள்ளது. நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்தது.
இதையடுத்து காயமடைந்த சிறுவனை மீட்டவர்கள் சிகிச்சைக்காக வால்பாறையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனச்சரக வனத்துறையினர் எஸ்டேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





