பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ்குமார் காலமானார்!
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ்குமார் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக ‘பாரத் குமார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். தாதா சாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ விருதுகளையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





