புல்வாமா பயங்கரவாத தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் தான்..!
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் தான் என்பதை அந்த நாட்டு அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிஆர்பிஎஃப் வீரர்கள் குறித்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று இருந்த நிலையில் தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என்று பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பகுதியில் தாக்குதல் இம்ரான் கான் தலைமையிலான அரசின் மிகப் பெரிய சாதனை என்று கூறினார். இதன்மூலம் புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் திட்டமிட்டு அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது.






