ஆபாச படம் எடுத்ததில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கிறதா..?
ஆபாச படம் எடுத்ததில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை மாடல் அழகிகளாக ஆபாச படங்களில் நடிக்க வைத்து கோடி கோடியாய் சம்பாதித்த புகாரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதுசெய்யப்பட்டார்.
ஒரு ஆபாச படத்துக்கு 5 லட்சம் வரை அவர்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா அல்லது அவருக்கு தெரியாமலேயே ஆபாச படங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.






