ஈரான்-அமெரிக்கப் பேச்சுவார்த்தை – விசா வழங்கவுள்ள பாகிஸ்தான்
ஈரான்-அமெரிக்கப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் செல்பவர்களுக்கு, வந்தவுடன் விசாக்கள் வழங்கப்படும் என பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் டார் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
“2026 இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தொடர்பாகப் பயணம் செய்யும், பங்கேற்கும் நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரதிநிதிகளையும் பாகிஸ்தான் வரவேற்கிறது. இதற்காக, அனைத்து விமான நிறுவனங்களும் அத்தகைய நபர்கள் அனைவரையும் விசா இல்லாமல் விமானத்தில் ஏற அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. பாகிஸ்தானில் உள்ள குடிவரவு அதிகாரிகள் அவர்களுக்கு வந்தவுடன் விசா வழங்குவார்கள்,” என்று அவர் X தளத்தில் எழுதினார்.






