எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறை அறிமுகம்…!
துபாய் சுகாதார ஆணையத்தின் சார்பில் சிறுவர்களுக்கு எச்சில் மூலம் கொரொனா பரிசோதனை செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை 3 வயது முதல் 16 வயதுடைய சிறுவர் சிறுமிகள் செய்து கொள்ளலாம் என்றும், இதற்கு 150 திர்காம் கட்டணம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாகவும் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சோதனை மூலம் 24 மணி நேரத்தில் முடிவுகள் தெரிந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






